தமிழை கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்க பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தை கற்பிக்க மறுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் இந்த துரோகம் மன்னிக்க முடியாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்திலுள்ள சி.பி.எஸ்.இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்